Vimal
செய்திகள்அரசியல்இலங்கை

ஆணவப்போக்கில் செயற்படுபவர்களால் சவால்களை எதிர்கொள்ள முடியாது! – பஸிலை சாடுகிறார் விமல்

Share

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சமீது, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான அமைச்சர் விமல் வீரவன்ச சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்துள்ளார். இதனால் கொழும்பு அரசியலில் மீண்டும் கொதிநிலை ஏற்பட்டுள்ளது.

அரச பங்காளிக்கட்சிகளின் முக்கிய கூட்டமொன்று இன்று (02) கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது நாட்டை மீட்டெடுப்பதற்கான யோசனைகளும் முன்வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, நிதி அமைச்சர் பஸிலை, அமைச்சர் விமல் விளாசித்தள்ளியுள்ளார்.

” எனக்கு மூளை உள்ளது, எனவே, நிபுணர்களின் ஆலோசனை தேவையில்லை எனக்கூறி, ஆணவப்போக்கில் செயற்படுபவர்களால் சவால்களை எதிர்கொள்ள முடியாது. நெருக்கடி நிலைமைகளை சுட்டிக்காட்டி, ஒன்பது கடிதங்களை அனுப்பினார் எனவும், ஆனால் எதற்கும் பதில் வரவில்லை எனவும் மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிடுகின்றார். நிதி அமைச்சரை சந்திக்க நேரம் வழங்கப்படவில்லை.

நாடு கடும் அந்நிய செலாவணி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் மத்திய வங்கி ஆளுநருக்கு நிதி அமைச்சரை சந்திக்க முடியவில்லையெனில், பிறகு நிலைமையை விளக்கவா வேண்டும்? இனிமேலும் எம்மால் மௌனம் காக்க முடியாது. அதனால்தான் உண்மையை வெளிப்படுத்துகின்றோம்.” – என்றும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 69405094615b9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

முல்லைத்தீவில் போதைப்பொருள் கடத்தல்: திருமணமான தம்பதியர் உட்பட ஐவர், ஐஸ் மற்றும் வாள்களுடன் கைது!

முல்லைத்தீவு மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட திருமணமான தம்பதியர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப்...

95570777 trainafp
இலங்கைசெய்திகள்

மீண்டும் திறக்கப்பட்ட பாடசாலைகள்: விடுமுறை மற்றும் பரீட்சை காரணமாக பாடசாலைகள் மூடப்படும் திகதிகள் அறிவிப்பு!

சமீபத்திய இயற்கை அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்டிருந்த பல பாடசாலைகள் இன்று (டிசம்பர் 16) மீண்டும் கல்வி...

95570777 trainafp
செய்திகள்

கிழக்கு ரயில் தண்டவாளத்தில் சேவை மீண்டும் ஆரம்பம்: 18 நாட்களுக்குப் பிறகு சீன விரிகுடாவிலிருந்து சீதுவா நோக்கிப் புறப்பட்டது முதல் சரக்கு ரயில்!

வெள்ளத்தால் சேதமடைந்த கிழக்கு ரயில் தண்டவாளங்களில் பழுதுபார்ப்புப் பணிகள் நிறைவடைந்த 18 நாட்களுக்குப் பிறகு, இன்று...

919387 00900779
இலங்கைசெய்திகள்

நெல் இருப்பை அரிசியாக்கி சந்தையில் விநியோகிக்க அமைச்சரவை அங்கீகாரம்!

நெல் சந்தைப்படுத்தல் சபையால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள நெல் இருப்பை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிக்கும் யோசனைக்கு அமைச்சரவை...