Medicines
செய்திகள்இலங்கை

நாட்டில் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு!

Share

நாட்டில் பாரிய மருந்து தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது என அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் (ACPPOA) தலைவர் சண்டிக கங்கந்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தெரிவித்துள்ள அவர்,

நாட்டில் தற்போதுள்ள மருந்துகளின் இருப்பு மூன்று மாதங்களுக்கே போதுமானது. அத்தியாவசியமான மருந்துகளுக்கு நாட்டில் 5% தட்டுப்பாடு உள்ளது. பெரும்பாலான மருந்தகங்கள் மாற்று வர்த்தக நாமங்களையுடைய மருந்துகளையே தற்போது நுகர்வோருக்கு வழங்கி வருகின்றன. இந்த நடைமுறையை நீண்டகாலத்துக்கு நீடிக்க முடியாது.

மருந்து பிரச்சினை என்பது நாட்டின் அனைத்து மக்களின் ஆரோக்கியம் சம்பந்தமானது. நாட்டில் ஏற்பட்டுள்ள ஏனைய பொருட்களின் தட்டுப்பாட்டை விட மருந்து தட்டுப்பாட்டு பிரச்சினையால் நாட்டில் பாரிய பிரச்சினை ஏற்படும்.

இதனை நிவர்த்திசெய்ய அரசாங்கம் தலையிடாவிட்டால் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

நாட்டில் நிலவும் டொலர் பிரச்சினை காரணமாக மருந்துகளை உற்பத்தி செய்யவோ, இறக்குமதி செய்யவோ முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், சில மருந்துகளுக்கு விலையும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் கட்டுப்பாட்டு விலைக்கு உட்பட்டால் பெரும்பாலான மருந்தகங்களில் அவற்றை விற்பனை செய்ய முடியாத நிலைமை ஏற்படும்.

தொடர்ச்சியாக மருந்துகளுக்கு தட்டுப்பாடு தொடருமாயின், இன்சுலின் மருந்துக்கும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

தற்போது, நாட்டில் பரசிட்டமோல், பனடோல், பனடீன், ஃப்ரீசியம், சாதாரண உப்பு மற்றும் ஜினாட் உள்ளிட்ட மருந்துகளில் பெரும்பாலானவைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஆன்டிபயாடிக் சிரப்புகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தற்போது, கொவிட், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்றவை சமூகத்தில் அச்சுறுத்தலாக உள்ள நிலையில், பரசிட்டமோல் மாத்திரைகளின் தேவை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், சந்தைக்கு பரசிட்டமோல் போதியளவு விநியோகம் இல்லாமையால் நாட்டில் பரவலாக தட்டுப்பாடு நிலவி வருகிறது – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 5 6
செய்திகள்இலங்கை

வங்காள விரிகுடாவில் புதிய குறைந்த அழுத்தப் பகுதி:  தாழமுக்கம் உருவாக வாய்ப்பு 

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் எதிர்வரும் நவம்பர் 22ஆம் திகதியளவில் ஒரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம்...

national hospital
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி தேசிய வைத்தியசாலையில் சாதனை: குறுகிய காலத்தில் நடமாட வைக்கும் முழங்கால் மாற்றுச் சத்திரசிகிச்சை – தாய்லாந்து நிபுணர்கள் உதவி!

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதைக் குறிக்கும் வகையில், கண்டி...

images 4 7
உலகம்இலங்கை

பிரித்தானியாவை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை முந்தைய தரவுகளை விட மூன்று மடங்கு அதிகரிப்பு!

பிரித்தானியாவை விட்டு நிரந்தரமாக வெளியேறிய பிரித்தானியர்களின் எண்ணிக்கை முன்னதாக அறிவிக்கப்பட்ட தரவுகளைக் காட்டிலும் மிகவும் அதிகம்...

5dbc2f30 18e7 11ee 8228 794cf17b91f4.jpg
செய்திகள்உலகம்

தமிழகத்தில் அதிர்ச்சி: தாயைத் தாக்கி இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய வழக்கில் 5 பேர் கைது!

இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய குற்றச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத்...