செய்திகள்
சடுதியாக அதிகரிக்கும் எரிபொருள் கேள்வி! – ஆபத்து என்கிறது எரிபொருள் கூட்டுத்தாபனம்
நாட்டில் எரிபொருள் தேவை அதிகரித்துள்ளது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் டீசலுக்கான கேள்வி ஒரு வாரத்திற்கு 5,500 மெற்றிக் டொன்னாக இருந்த நிலையில், தற்போது 8,000 மெற்றிக் டொன் வரை அதிகரித்துள்ளது.
இதேவேளை, பெற்றோலுக்கான கேள்வி வாராந்தம் 3,000 மெற்றிக் டொன்னாக இருந்த நிலையில் தற்போது 4,500 மெற்றிக் டொன் வரை அதிகரித்துள்ளது.
நாட்டில் அதிகரித்துள்ள இந்த எரிபொருளுக்கான கேள்வி நிலையானது, மிக பாரதூரமான நிலை என சுட்டிக்காட்டிய சுமித் விஜேசிங்க இந்த நிலையை கட்டுப்படுத்துவதற்கு தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் – என்றார்.
You must be logged in to post a comment Login