Mahindanatha aluthkamake
செய்திகள்அரசியல்இலங்கை

ஏழு மாதங்களில் நிலைமை தலைகீழாக மாறும்! – கூறுகிறார் மஹிந்தானந்த

Share

“அரசுக்கு எதிராக தற்போது விமர்சனங்கள் குவிந்தாலும், இன்னும் ஏழு மாதங்களில் இந்நிலைமை தலைகீழாக மாறும் என்பது உறுதி. அதேபோல எதிரணிகளின் பகல் கனவும் பழிக்காது.” – என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இன்று சமூகவலைத்தளங்கள் பக்கம் சென்றால், முகநூலில் அநுரகுமார திஸாநாயக்கதான் ஜனாதிபதி. மறுபுறத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சஜித்தும் கதைக்கின்றார்.

கடந்த 5 ஆண்டுகளில் இவர்கள்தான் நாட்டை சீரழித்தனர். நாட்டு வளங்களை விற்பனை செய்தனர்.

சமூகவலைத்தளங்கள் ஊடாக அரசுக்கு எதிராக பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டாலும் இன்னும் 6, 7 மாதங்களில் நிலைமை தலைகீழாக மாறும்.

கடந்த ஆட்சியில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்கள் சிறைக்கு செல்ல வேண்டிவரும். இந்த ஆட்சியின்கீழ் ஜனநாயகம் முழுமையாக பாதுகாக்கப்படுகின்றது. அதனால்தான் கள்வர்களெல்லாம் கத்துகின்றனர்.” – என்றார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...