sarath
செய்திகள்இலங்கை

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்மன்னிப்பு கோர வேண்டும்! – சரத் வீரசேகர

Share

” பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் இலங்கை மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.” – என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இன்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பொன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், சாதாரண சம்பவம் என அவர் கருத்து வெளியிட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.

அது உண்மையெனில் அதனை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். இது தொடர்பில் அவர் இலங்கை மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும். தான் வெளியிட்ட கருத்தை மீளப்பெற வேண்டும்.”- என்றார் சரத் வீரசேகர.

“இது மோசமான சம்பவம் என்று சொல்ல முடியாது. உணர்ச்சியில் இது போன்ற செயல்கள் சில நேரங்களில் நடந்துவிடுகிறது என்று கூறி, இலங்கையர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் நியாயப்படுத்தியுள்ளமை பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 20
இலங்கைசெய்திகள்

டிட்வா சூறாவளி நிவாரணம்: பாகிஸ்தான் 7.5 டன் மேலதிக உதவிகளை இலங்கைக்கு அனுப்பியது!

‘டிட்வா’ சூறாவளியால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் மொஹமட் ஷபாஸ் ஷெரீப்பின் பணிப்புரையின்...

22727102 s
செய்திகள்விளையாட்டு

2026 உலகக் கிண்ணக் கால்பந்து அட்டவணை வெளியீடு: 48 அணிகள் பங்கேற்கும் திருவிழா ஜூன் 11 இல் ஆரம்பம்!

உலக மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் 2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளுக்கான அட்டவணையை ஃபிபா...

images 4 2
உலகம்செய்திகள்

ஜப்பான் போர் விமானங்கள் மீது FCR ரேடார் மூலம் சீனா அச்சுறுத்தல்: பதற்றம் அதிகரிப்பு!

ஜப்பானின் போர் விமானங்கள் மீது, எஃப்.சி.ஆர். எனப்படும் ஆயுதக் கட்டுப்பாட்டு ரேடாரை பயன்படுத்திச் சீனா அச்சுறுத்தியதாக...

articles2FSNhOIAsQzPoz2H46RiuW
உலகம்செய்திகள்

விமானப் பயணிகளுக்குச் சிங்கப்பூர் கடுமையான கட்டுப்பாடுகள்: ஜனவரி 30 முதல் அமுல்!

உலகளவில் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் முன்னிலை வகிக்கும் சிங்கப்பூர், தனது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக,...