செய்திகள்

பிரியந்தவின் கொலை நியாயமானது: நியாயப்படுத்தும் அமைச்சர்!!!

Published

on

பாகிஸ்தானில் இலங்கை மேலாளர் மேலாளர் பிரியந்த குமார கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் நியாயப்படுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பர்வேஸ் கட்டக்கின் (Pervez Khattak) இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் பணியாற்றிய இலங்கையரான பிரியந்த குமார கடந்த வெள்ளிக்கிழமை மிக கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதுடன், உயிருடன் எரிக்கப்பட்டார்.

இச்சம்பவத்திற்கு கடும் அதிருப்திகள் வெளிப்படுத்தப்பட்டு வரும் நிலையில், பாகிஸ்தான் பிரதமரான இம்ரான்கான் குற்றவாளிகள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவார்கள் என உறுதியளித்துள்ளார்.

இந்தநிலையில்,குறித்த சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“இது மோசமான சம்பவம் என்று சொல்ல முடியாது. உணர்ச்சியில் இது போன்ற செயல்கள் சில நேரங்களில் நடந்துவிடுகிறது என்று கூறியுள்ளார். இக்கொடூரச் சம்பவத்தைப் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பர்வேஸ் கட்டக் நியாயப்படுத்தியுள்ளமையானது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version