செய்திகள்
போதை விருந்தில் ஈடுபட்ட 20 பேர் கைது!!!
தமிழக-கேரள எல்லையில் போதை விருந்தில் ஈடுபட்ட 20 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக- கேரள எல்லையான குமரி மாவட்டத்தை அண்மித்துள்ள கேரளாவின் பூவார் பகுதியில் இருக்கும் சொகுசு விடுதியில் போதை விருந்து நடைபெறுவதாக பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, கலால் துறை அதிகாரிகள் சுற்றுலா பயணிகள் போல சம்பவ இடத்திற்குச் சென்று குறித்த கும்பலை சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.
மேலும் சொகுசு விடுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த போதை பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன
இதேவேளை போதை விருந்துக்கு ஏற்பாடு செய்த முக்கிய நபரான கேரளாவின் ஆரியநாடு பகுதியைச் சேர்ந்த அக்ஷயா மோகன் கைது செய்யப்பட்டு, அவரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
#IndiaNews
You must be logged in to post a comment Login