un 1
செய்திகள்அரசியல்இலங்கை

மலைய மக்களின் வாழ்க்கை நிலைமையை நான் நேரடியாக பார்த்தேன் – ஐ.நா நிபுணர் ஒபோகோட்டா

Share

‘ஓரம் கட்டப்படுதல், பாரபட்சம், சுரண்டல் இயல்பிலான வேலை நிலைமைகள் என மிக மோசமான வாழ்க்கை நிலைமைகளை மலையகத் தமிழர்கள் அனுபவிப்பதை நான் நேரடியாக பார்த்தேன்”  என ஐ.நா நிபுணர் ஒபோகோட்டா தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவர் இதனை தெரிவித்தார்.

இலங்கையில் 8 நாட்கள் விஜயத்தினை மேற்கொண்டிருந்த இவர், ஒபோகாட்டா அரசாங்க அதிகாரிகள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, சிவில் சமூக அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள், கல்விமான்கள், குடிபெயர் தொழிலாளர்கள் மற்றும் ஊழியச் சுரண்டல்களினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரையும் ஒபோகாட்டா சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரசாங்கம் சமகால அடிமை வடிவங்களை குறைப்பதற்கான வலுவான சட்டகத்தை கொண்டுள்ளது.

எனினும் சில பலவந்த ஊழியம் மற்றும் அடிமை சேவகம் என்பவற்றுக்கு இணையாக சாதி அடிப்படையிலான பாரபட்சம், ஊழியச் சுரண்டல் காணப்படுகின்றன.

அதனை தவிர்த்து வெற்றி கொள்வதற்கு பெரும்பாலும் இலங்கை அரசாங்கம் அனைவரையும் உள்வாங்கி அனைத்து துறைகளையும் அரவணைத்து கொள்ளும் ஒரு சமூகமாக உருவாக வேண்டும் என அவர் தெரிவித்தார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 69244e1b9b269
செய்திகள்அரசியல்இலங்கை

திருகோணமலை கடற்கரையில் அனுமதியற்ற கட்டுமானம்: விகாராதிபதி உட்பட சிலருக்கு நீதிமன்ற அழைப்பாணை!

திருகோணமலை கோட்டை வீதியின் கடற்கரையோரமாக அனுமதியற்ற கட்டுமானம் ஒன்றை கடந்த நவம்பர் 15 ஆம் திகதி...

images 1 2
செய்திகள்இலங்கை

பிரபாகரனின் 71வது பிறந்தநாள்: வல்வெட்டித்துறையில் வெகு விமர்சையாகக் கொண்டாட்டம்!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71வது பிறந்தநாள் இன்றைய தினம் (நவம்பர் 26) யாழ்ப்பாணத்தில்...

images 8
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டின் வேலையின்மை விகிதம் 3.8% ஆகக் குறைந்தது: 365,951 பேர் வேலையில்லாமல் உள்ளனர் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

நாட்டில் தற்போது 365,951 பேர் வேலையில்லாமல் இருப்பதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (நவம்பர் 26)...