un 1
செய்திகள்அரசியல்இலங்கை

மலைய மக்களின் வாழ்க்கை நிலைமையை நான் நேரடியாக பார்த்தேன் – ஐ.நா நிபுணர் ஒபோகோட்டா

Share

‘ஓரம் கட்டப்படுதல், பாரபட்சம், சுரண்டல் இயல்பிலான வேலை நிலைமைகள் என மிக மோசமான வாழ்க்கை நிலைமைகளை மலையகத் தமிழர்கள் அனுபவிப்பதை நான் நேரடியாக பார்த்தேன்”  என ஐ.நா நிபுணர் ஒபோகோட்டா தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவர் இதனை தெரிவித்தார்.

இலங்கையில் 8 நாட்கள் விஜயத்தினை மேற்கொண்டிருந்த இவர், ஒபோகாட்டா அரசாங்க அதிகாரிகள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, சிவில் சமூக அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள், கல்விமான்கள், குடிபெயர் தொழிலாளர்கள் மற்றும் ஊழியச் சுரண்டல்களினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரையும் ஒபோகாட்டா சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரசாங்கம் சமகால அடிமை வடிவங்களை குறைப்பதற்கான வலுவான சட்டகத்தை கொண்டுள்ளது.

எனினும் சில பலவந்த ஊழியம் மற்றும் அடிமை சேவகம் என்பவற்றுக்கு இணையாக சாதி அடிப்படையிலான பாரபட்சம், ஊழியச் சுரண்டல் காணப்படுகின்றன.

அதனை தவிர்த்து வெற்றி கொள்வதற்கு பெரும்பாலும் இலங்கை அரசாங்கம் அனைவரையும் உள்வாங்கி அனைத்து துறைகளையும் அரவணைத்து கொள்ளும் ஒரு சமூகமாக உருவாக வேண்டும் என அவர் தெரிவித்தார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4be209b0 d4fb 11f0 949c 45d05c88eada
உலகம்செய்திகள்

ரஷ்யாவுக்கு நிலம் இல்லை என்ற நிபந்தனையுடன் அமெரிக்காவிடம் சமர்ப்பிக்க உக்ரைன் தயார்!

ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் முகமாக, மாற்றியமைக்கப்பட்ட புதிய அமைதித் திட்டத்தை அமெரிக்காவிடம் சமர்ப்பிக்க...

22 61ea2c4754d53
இலங்கைசெய்திகள்

தென் கொரியப் புலம்பெயர் இலங்கையர் உதவி: 48 மணி நேரத்தில் திரட்டப்பட்ட ரூ. 38.43 மில்லியன் நிவாரண நிதி பிரதமரிடம் கையளிப்பு!

தென் கொரியாவில் தொழில்புரியும் இலங்கையர்களால் திரட்டப்பட்ட 38.43 மில்லியன் ரூபாய் பெறுமதியான நிதி, இலங்கையில் அனர்த்தத்தால்...

image 2589f1a804
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மையத்திலிருந்து கொழும்புக்கு 73,000 கிலோகிராம் மரக்கறிகள் அனுப்பப்பட்டன: விலைகள் குறித்த விபரம் உள்ளே!

நுவரெலியா பொருளாதார மையத்திலிருந்து இன்று (09) சுமார் 73,000 கிலோகிராம் மரக்கறிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

thailand cambodia border
உலகம்செய்திகள்

தாய்லாந்துடனான மோதலில் கம்போடியாவில் 7 பேர் பலி: 20,000 பேர் வெளியேற்றம்!

தாய்லாந்துடனான சமீபத்திய எல்லை மோதலில் கம்போடியாவில் 07 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும்...