செய்திகள்
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!!
தமிழகத்தில் கொரோனா மீண்டும் அதிகரித்துள்ளது.
இந்தியாவின் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 765 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று மட்டும் 12 பேர் சாவடைந்துள்ளனர் .
தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதிதாக 765 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்படோர் எண்ணிக்கை 27,19,515-ஆக அதிகரித்துள்ளது.
ஒருநாளில் மட்டும் 12 பேர் சாவடைந்ததால், இதுவரை மொத்தமாக சாவடைந்ததோரின் எண்ணிக்கை 36,361-ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவிலிருந்து 879 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 26,74,327-ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரு நாளில் மட்டும் 1,00,998 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login