diwali 679 1571638039 1605507165 1606472776
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முல்லைத்தீவில் இராணுவத்தினரால் மக்களிடையே ஏற்பட்ட பதற்றநிலை!

Share

கார்த்திகை தீபத்திருநாளில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் தீபமேற்றி தீபத்திருநாளை கொண்டாடிய வேளையில், அங்கு  வந்த இராணுவத்தினரால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் பல பாகங்களிலும் நேற்றைய தினம் இந்துக்களால் கார்த்திகை தீப விளக்கீடுகள் கொண்டாடப்பட்டது. இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்திலும் மக்கள் கடைகளிலும், வீடுகளிலும் விளக்குகளை  ஏற்றி கொண்டாடினர்.

இதனை அறிந்து அங்கு வந்த இராணுவத்தினராலும்  , இராணுவ புலனாய்வாளர்களாலும் மக்களிடையே பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

IMG 9579

இராணுவத்தினர் தீபம் ஏற்றப்பட்ட வீடுகளுக்கு சென்று விசாரணை மேற்கொண்டதுடன்,  அவர்களை அச்சுறுத்தும் வகையிலும் நடந்துக்கொண்டதாக முல்லைதீவு மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

ஒரு ஜனநாயக நாட்டில் கலாசார பண்பாட்டுடன் கூடிய பண்டிகைகளை கூட கொண்டாட முடியாத சூழலில் தமிழர் வாழ்ந்துக்கொண்டிருப்பதாகவும், இன்னும் அச்சத்துடனேயே நாட்டில் வாழ வேண்டியுள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நவம்பர் 27ஆம் நாள் மாவீரர் நினைவேந்தலை முன்னிட்டு கடந்த 17 (புதன்கிழமை) அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 பொலிஸ் பிரிவுகளினூடாக 47 பேருக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் நினைவேந்தலுக்கு  தடையுத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...