செய்திகள்
குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு: தாத்தல்தாரிக்கு பொலிஸார் வலைவீச்சு
குடும்பஸ்தர் ஒருவர் மீது நேற்றைய தினம் வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் – சுன்னாகம் – அம்பனை பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் மீதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாள்வெட்டிற்கு இலக்கான அம்பனைப் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய குடும்பஸ்தர், தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.
தாக்குதல்தாரி தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்
You must be logged in to post a comment Login