20211119 111155 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழில் முயற்சியாளர்களுக்கு ஊக்குவிப்பு!

Share

யாழ்ப்பாணத்தில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான ஊக்குவிப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்று இடம்பெற்றது.

இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகம், இலங்கை கணக்கியல் தொழில்நுட்பவியலாளர் சங்கம், விதாதா, ஸ்ரீலங்கா ரெலிகொம், சனச அபிவிருத்தி வங்கி, மக்கள் வங்கி ஆகிவற்றின் ஆதரவுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.

வட மாகாணம் முழுவதும் அடையாளம் காணப்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு தொழில் சார்ந்த ஆலோசனைகள் வழிகாட்டல் என்பவற்றை வழங்குவதே இதன் நோக்கம்.

20211119 091250 1

அவர்களது நிலையை மேம்படுத்தி நாட்டுக்கும் அவர்களும் பலனை பெற இந்த நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டதுடன் இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகத் தலைவர் மணில் ஜெயசிங்க, சனச அபிவிருத்தி வங்கியின் தலைவர் லக்ஷ்மன் அபேசேகர, நந்திக்க புத்திபால, யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் தலைவர் ஜெயசேகரம் விதாதா இயக்குனர், ஆகியோரும் பங்கேற்றனர்.

அத்துடன் ஸ்ரீலங்கா டெலிகொம் வட பிராந்திய முகாமையாளர் சிவானந்தன், யாழ்ப்பாணம் வர்த்தக மன்றத்தின் தலைவர், யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட மற்றும் பிரதேச விதாதா அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
GettyImages 1202240221
செய்திகள்உலகம்

மார்ச் 20-ல் வெளியாகிறது புதிய BTS அல்பம் – உலகச் சுற்றுப்பயணத்திற்கும் தயார்!

உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள தென் கொரியாவின் புகழ்பெற்ற கே-பாப் (K-pop) இசைக் குழுவான BTS,...

44520176 vijay33
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. அழைப்பாணை – ஜனவரி 12-ல் விசாரணை!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரசாரத்தின் போது...

gold 5
செய்திகள்இலங்கை

தொடர்ந்து உயரும் தங்கம்: இன்றும் பவுணுக்கு 3,000 ரூபாய் அதிகரிப்பு – புதிய விலைப் பட்டியல் இதோ!

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியான ஏற்றத்தைக் கண்டு வருகின்றது. நேற்று (05)...

1739116331 energy min
இலங்கைஏனையவைசெய்திகள்

மூன்று ஆண்டுகளில் 30% கட்டணக் குறைப்பு: நாடாளுமன்றத்தில் அமைச்சர் குமார ஜயகொடி உறுதி!

வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கும் இலக்கை நோக்கி அரசாங்கம்...