20211119 111155 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழில் முயற்சியாளர்களுக்கு ஊக்குவிப்பு!

Share

யாழ்ப்பாணத்தில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான ஊக்குவிப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்று இடம்பெற்றது.

இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகம், இலங்கை கணக்கியல் தொழில்நுட்பவியலாளர் சங்கம், விதாதா, ஸ்ரீலங்கா ரெலிகொம், சனச அபிவிருத்தி வங்கி, மக்கள் வங்கி ஆகிவற்றின் ஆதரவுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.

வட மாகாணம் முழுவதும் அடையாளம் காணப்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு தொழில் சார்ந்த ஆலோசனைகள் வழிகாட்டல் என்பவற்றை வழங்குவதே இதன் நோக்கம்.

20211119 091250 1

அவர்களது நிலையை மேம்படுத்தி நாட்டுக்கும் அவர்களும் பலனை பெற இந்த நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டதுடன் இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகத் தலைவர் மணில் ஜெயசிங்க, சனச அபிவிருத்தி வங்கியின் தலைவர் லக்ஷ்மன் அபேசேகர, நந்திக்க புத்திபால, யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் தலைவர் ஜெயசேகரம் விதாதா இயக்குனர், ஆகியோரும் பங்கேற்றனர்.

அத்துடன் ஸ்ரீலங்கா டெலிகொம் வட பிராந்திய முகாமையாளர் சிவானந்தன், யாழ்ப்பாணம் வர்த்தக மன்றத்தின் தலைவர், யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட மற்றும் பிரதேச விதாதா அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...