செய்திகள்
2023 இல் ஆட்சி கவிழும்!! – ஹிருணிகா சபதம்
“2025 ஆம் ஆண்டுவரை காத்திருக்கமாட்டோம். 2023 இல் இந்த ஆட்சி கவிழ்க்கப்படும். பெண் சிங்கமாக மீண்டும் களமிறங்கியுள்ளேன். சஜித்தை ஜனாதிபதியாக்க பாடுபடுவேன்.”
இவ்வாறு சபதமெடுத்து அதிரடியாக அறிவிப்பு விடுத்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா.
கடுவலை பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” கடுவலை தொகுதியில் மொட்டு கட்சியின் அரசியல் செயற்பாட்டாளர்கள் உள்ளனர். நான் ஒரு பெண்ணாக இங்கு வந்துள்ளேன். இந்த கோட்டையையும் நிச்சயம் கைப்பற்றுவோம். 2025 வரை காத்திருக்கமாட்டோம். 2023 இல் ஆட்சி மாற்றம் இடம்பெறும்.
எமது தலைவர் சஜித்தை ஜனாதிபதியாக்கி மக்கள் ஆட்சியை மலரச்செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ” – என்றார்.
அதேவேளை, ஜனநாயக விரோத வழியில் பயணிக்கும் இந்த அரசுக்கு எதிராக மக்கள் ஓரணியில் திரள வேண்டும் என பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகாவும் இக்கூட்டத்தில் பங்கேற்று அறைகூவல் விடுத்தார்.
You must be logged in to post a comment Login