செய்திகள்
முல்லை – மோட்டார் திணைக்கள சேவைகள் நிறுத்தம்!
முல்லைத்தீவு மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நடவடிக்கைகள் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.
குறித்த அலுவலகத்தின் உறுப்பினர் ஒருவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ள நிலையிலேயே அலுவலக செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும், இடைநிறுத்தப்பட்டுள்ள அலுவலகத்தின் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும், அது தொடர்பான திகதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login