newvirus
செய்திகள்உலகம்

ரஷியாவில் கொரோனாவால் சாவடைவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Share

ரஷியாவில் கொரோனாவுக்கு சாவடைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

அதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,211 கொரோனா நோயாளிகள் சாவடைந்துள்ளனர் எனவும் இதுவே ஒருநாளில் சாவடைந்தவர்களின் எண்ணக்கையில் கூடுதலான எண்ணிக்கை  எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், 249,215 போ் கொரோனாவுக்கு சாவடைந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது தவிர, கடந்த 24 மணி நேரத்தில் 39,160 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இத்துடன், கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 88,73,655-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரஷியாவில் இதுவரை 76,19,596 கொரோனா நோயாளிகள் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்;

10,04,844 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

அவா்களில் 2,300 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதுஎனவும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு பின்னால் வீசப்பட்ட கரு: சிசிடிவி காட்சிகளைக் கொண்டு பொலிஸார் தீவிர விசாரணை!

யாழ்ப்பாணம் நகர் மத்தியில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட கரு தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் சிசிடிவி கமராக்களின்...

28
இலங்கைசெய்திகள்

எரிபொருள் சேமிப்பு தொடர்ந்தால் மீண்டும் QR குறியீடு முறை: பிரதி அமைச்சர் எச்சரிக்கை!

பொதுமக்கள் தேவைக்கு அதிகமாக எரிபொருளைச் சேமிக்கத் (Hoarding) தொடங்கினால் மட்டுமே, மீண்டும் QR குறியீடு (QR...

27
உலகம்செய்திகள்

ஈரான் தலைவர் படுகொலை இழிவானது: ரஷ்ய அதிபர் புடின் கண்டனம் – பிராந்தியத்தில் ரஷ்யாவுக்குப் பின்னடைவு!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் கொலையை ஒரு...

26
அரசியல்இலங்கைசெய்திகள்

நிலக்கரி டெண்டர் பொய்: 13% மின் கட்டண உயர்வு மக்களை மேலும் நசுக்கும் – ரவி கருணாநாயக்க எச்சரிக்கை!

வரலாற்றில் முதல் முறையாக முறையான டெண்டர் நடைமுறை மூலம் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதாக அரசாங்கம் கூறுவது...