8cebfadf keheliya rambukwella
செய்திகள்அரசியல்இலங்கை

கொரோனா கட்டுப்பாடுகள் மக்கள் கைகளிலேயே! – கெஹலிய தெரிவிப்பு

Share

நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பான தீர்மானங்களை மக்களின் நடத்தைகளே தீர்மானிக்கின்றன.

இவ்வாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

நாட்டில் துபோது கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் பகுதியளவில் நீக்கப்பட்டுள்ளன, இந்நிலையில் மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்குமாயின் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் மக்களின் செயற்பாடுகளே தீர்மானிக்கும்.

மக்கள் சுகாதார நடைமுறைகளை சரியாக பின்பற்றாது செயற்படுவார்களாயின், மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் உட்பட இறுக்கமான கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிய நிலைமைக்கு முகம் கொடுக்க நேரிடலாம்.

அரசாங்கம் கொரோனாத் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் மக்களும் தமது அதிகபட்ச பங்களிப்பை வழங்க வேண்டும். மக்களின் செயற்பாடுகளைப் பொறுத்தே கட்டுப்பாடுகள் தொடர்பில் தீர்மானிக்கப்படும்.

கொரோனா பரவல் தொடர்பில் எந்த முடிவுகளையும் எடுக்க முடியாது. ஆனால் தொற்று நோய் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டியது அனைவரது எதிர்காலத்துக்கும் நல்லது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் மட்டுமே நாட்டில் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. எனவே தடுப்பூசிகள் தொடர்பில் மக்கள் குழப்பமடையத் தேவையில்லை – எனவும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
aswesuma
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டத்தில் பயன்பெறுவோர் கவனத்திற்கு: வருடாந்த தகவல் புதுப்பிப்பு ஆரம்பம்; டிசம்பர் 10 கடைசித் தேதி!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து...

anura sri lanka president
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியுடன் தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: ‘இனவாத வலைக்குள் நாடு சிக்காது’ – அநுரகுமார திசாநாயக்க உறுதி!

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ...

25 6921dea82dcb6
உலகம்செய்திகள்

வரி விதிப்பு வழக்கு: டொனால்ட் ட்ரம்ப் கடும் நெருக்கடியில் – உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கி அவசர நடவடிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சர்வதேச வர்த்தக வரி விதிப்பு தொடர்பான ஒரு முக்கிய...

images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ஊடகப்படுகொலைகள், அடக்குமுறைகளுக்கு நீதி வேண்டும்” – பாராளுமன்றத்தில் துரைராசா ரவிகரன் வலியுறுத்தல்!

கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடகப்படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளுக்கு இந்த அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க...