செய்திகள்
புகைப்படம் எடுக்கும்போதும் முகக்கவசம் அவசியம்!!
நிகழ்வுகளில் புகைப்படம் எடுக்கும் சந்தர்ப்பங்களிலும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் இந்த நடைமுறை சரியாக பேணப்படுகின்றமையை புகைப்படக்காரர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
மேலும், நிகழ்வுகளில் உணவு அல்லது பானங்கள் அருந்துவது தவிர்ந்த ஏனைய நேரங்களில் முகக்கவசம் அகற்றுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
இயன்றளவு மக்கள் திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளை குறைந்தளவு எண்ணிக்கையானோருடன் நிகழ்த்துவதற்கு பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். நோய்ப் பரவழைத்த தடுக்க அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதுதான் அவதானத்துடனும் செயற்படுவது அவசியமாகும். – என்றும் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login