TALIBAN 1
செய்திகள்உலகம்

ஆப்கானிஸ்தான் குறித்து அமெரிக்கா வெளியிட்ட பரபரப்புத் தகவல்!!

Share

ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாக இருக்கக்கூடாது என, அமெரிக்காவும், இந்தியாவும் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்கப் படையினர் அங்கிருந்து வெளியேறிய நிலையில், ஆப்கானிஸ்தானின் அரச படையினருடன் போரிட்ட தலிபான்கள் அந்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றினர்.

இந்நிலையில் அங்கிருந்து தலிபான் எதிர்ப்பாளர்கள் அனைவரும் வெளியேறும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தொடர்ந்து ஆட்சியமைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதனையடுத்து, தலிபான்களுக்கு உலக நாடுகள் ஆதரவளிக்க வேண்டுமென, சீனாவும், பாகிஸ்தானும் நேற்று முன்தினம் கூட்டாக அழைப்பு விடுத்திருந்தன.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாக எப்போதும் இருக்காது என, தலிபான்கள் உறுதியளிக்க வேண்டுமென கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

அமெரிக்க – இந்தியா நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகளின் பங்கேற்பில் விசேட கூட்டம் அமெரிக்கா வாசிங்டனில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், குறித்த கூட்டத்திலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைத்துள்ள தலிபான்களின் ஆட்சியை, அமெரிக்கா போன்ற நாடுகள் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

#WORLD

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...