சிசு 2
செய்திகள்இலங்கை

ஒன்றரை மாத சிசுவை கோடாரியால் வெட்டி தாய் கொலை!

Share

அநுராதபுரம் பகுதியில் ஒன்றரை மாத பச்சிளம் சிசுவை கோடாரியால் வெட்டி கொடூரமாக தாய் ஒருவர் கொலை செய்துள்ளார்.

அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உடபட்ட பகுதியிலேயே இவ்வாறு இளம் தாய் ஒருவரால் சிசு கோடாரியால் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பட்டதாரி ஆசிரியையான (வயது–30) குறித்த தாய், சிசுவை நேற்றுமுன்தினம் இவ்வாறு கொலை செய்துள்ளார் என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

குழந்தையை கொலைசெய்த பின் பொலிஸ் நிலையம் சென்று சரணடைந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இதுதொடர்பில் எதுவித காரணங்களும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் குழந்தையின் சடலம் அநுராதபுரம் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 693b75dbdb13b
இலங்கைசெய்திகள்

காதலிக்கு ஸ்மார்ட் ஃபோன், மீதிப் பணத்தைச் சூதாட்டம்: அளுத்கமையில் கொள்ளையிட்ட இளைஞன் கைது!

அளுத்கமைப் பகுதியில் பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக 18 வயதுடைய ஒருவர்...

the economic times tamil
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு: 24 கரட் பவுண் ரூ. 339,000!

நாட்டில் இன்றையதினம், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் 3,000...

images 7 4
உலகம்செய்திகள்

ChatGPT தூண்டுதலால் தாயைக் கொன்ற மகன்: Open AI மீது குடும்பத்தினர் வழக்கு!

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தைச் சேர்ந்த சோல்பெர்க் (Saulberg) என்பவர் கடந்த ஆகஸ்ட் 3ஆம் திகதி தனது...

25 693bfb6f9f0d2
உலகம்செய்திகள்

திடீர் காலநிலை மாற்றங்கள் அதிகரிக்கின்றன: ஐ.நா.வின் கடுமையான எச்சரிக்கை!

உலகம் முழுவதும் திடீர் காலநிலை மாற்றங்கள் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) நேற்று...