சிசு 2
செய்திகள்இலங்கை

ஒன்றரை மாத சிசுவை கோடாரியால் வெட்டி தாய் கொலை!

Share

அநுராதபுரம் பகுதியில் ஒன்றரை மாத பச்சிளம் சிசுவை கோடாரியால் வெட்டி கொடூரமாக தாய் ஒருவர் கொலை செய்துள்ளார்.

அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உடபட்ட பகுதியிலேயே இவ்வாறு இளம் தாய் ஒருவரால் சிசு கோடாரியால் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பட்டதாரி ஆசிரியையான (வயது–30) குறித்த தாய், சிசுவை நேற்றுமுன்தினம் இவ்வாறு கொலை செய்துள்ளார் என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

குழந்தையை கொலைசெய்த பின் பொலிஸ் நிலையம் சென்று சரணடைந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இதுதொடர்பில் எதுவித காரணங்களும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் குழந்தையின் சடலம் அநுராதபுரம் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 2 2
இலங்கைசெய்திகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று இரவு முதல் மழை அதிகரிக்கும்!

நாட்டில் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக,...

25 6935546f3239d
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சிவலிங்கம்: தற்போதுள்ள நிலையிலேயே பேண உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சர்ச்சைக்குரிய வகையில் இடமாற்றம் செய்யப்பட்ட சிவலிங்கத்தை, தற்போது தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள நிலையிலிருந்து...

ISBS SRILANKA PRISON
இலங்கைசெய்திகள்

பூஸா சிறைச்சாலை மோதல்: கைதிகள் நடத்திய தாக்குதலில் சிறைச்சாலை அத்தியட்சகர் காயம்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் கைதிகளை இடமாற்றம் செய்ய முற்பட்டபோது ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அத்தியட்சகர்...

images 1 2
இலங்கைசெய்திகள்

அரசியல் தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் விவகாரங்களில் அரசாங்கம் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை – மன்னார் ஆயர்!

புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற முக்கிய விடயங்களில் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை...