சிசு 2
செய்திகள்இலங்கை

ஒன்றரை மாத சிசுவை கோடாரியால் வெட்டி தாய் கொலை!

Share

அநுராதபுரம் பகுதியில் ஒன்றரை மாத பச்சிளம் சிசுவை கோடாரியால் வெட்டி கொடூரமாக தாய் ஒருவர் கொலை செய்துள்ளார்.

அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உடபட்ட பகுதியிலேயே இவ்வாறு இளம் தாய் ஒருவரால் சிசு கோடாரியால் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பட்டதாரி ஆசிரியையான (வயது–30) குறித்த தாய், சிசுவை நேற்றுமுன்தினம் இவ்வாறு கொலை செய்துள்ளார் என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

குழந்தையை கொலைசெய்த பின் பொலிஸ் நிலையம் சென்று சரணடைந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இதுதொடர்பில் எதுவித காரணங்களும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் குழந்தையின் சடலம் அநுராதபுரம் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1536x864 cmsv2 32bbee6e d1cd 5a5c adf0 bcfb4d4522bb 9590501
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவில் பேருந்து விபத்து: 16 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் இடம்பெற்ற கோர பேருந்து விபத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளதாக...

images 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எல்ல சுற்றுலா வலயத்தில் ஏற்பட்ட அமைதியின்மை: இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அதிரடியாக இடமாற்றம்!

எல்ல (Ella) சுற்றுலா வலயத்தில் வெளிப்பிரதேச வாகனச் சாரதிகளுக்கும் உள்ளூர் வாகனச் சாரதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட...

25 68de585f85210 md
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை மறுதினம் முதல் வடக்கு ரயில் பாதை முழுமையாகத் திறப்பு: மீண்டும் ஓடத்தொடங்கும் ‘யாழ்தேவி’!

புனரமைப்புப் பணிகள் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்த வடக்கு ரயில் மார்க்கம், தற்போது ரயில்...

1528176000 protesst l
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 5-க்குள் தீர்வு வேண்டும்; இல்லையேல் போராட்டம் – ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கடும் எச்சரிக்கை!

பாடசாலை நேரத்தை மாற்றுவது தொடர்பாக அரசாங்கம் உரிய பதிலளிக்கத் தவறினால், ஜனவரி மாதம் 5 ஆம்...