161380180674
செய்திகள்இலங்கை

தடுப்பூசி தொடர்பில் யாழ்.மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு!!

Share

தடுப்பூசி தொடர்பில் யாழ்.மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு!!

இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை விரைவாக பெற்று தத்தமது பாதுகாப்பை உறுதிப்படுதிக்கொள்ளுமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தொடர்பில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும்போதே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
மிக விரைவாகவும் அமைதியான முறையிலும் யாழ். மாவட்டத்தில் இரண்டாம் கட்ட தடுப்பூசி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் பொதுமக்கள் அனைவரும் தமது இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை தாமதிக்காது அடுத்த ஓரிரு நாள்களுக்குள் பெற்று கொவிட்-19 நோய் தொற்று தாக்கத்திலிருந்து தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

மேலும் தற்போதைய இறப்பு நிலைமையை ஆய்வுக்கு உட்படுத்தியபோது 60 க்கும் மேற்பட்டோரில் பெண்கள் இறப்பு வீதம் அதிகமாக காணப்படுகின்றது.

அதிலும் குறிப்பாக இதுவரையான அறிக்கைகளின்படி இறந்தோரில் 70 வயதுக்கு மேற்பட்டோரில் ஆண்கள் 79 பேராகவும் பெண்கள் 53 பேராவும் காணப்படுகின்றனர்.

எனவே அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட்-19 தொற்று ஏற்படக்கூடிய சூழ்நிலை அதிகமாக காணப்படுவதால் எவ்வித தயக்கமின்றி இத் தடுப்பூசி விடயம் தொடர்பில் அரசாங்கம் மற்றும் சுகாதார தரப்பினர் விடுத்துள்ள அறிவுறுத்தல்களுக்கமைய உரிய தடுப்பூசி செலுத்தப்படும் மையங்களுக்கு சென்று அடுத்துவரும் நாள்களில் விரைவாக தமது தடுப்பூசியைப் பெற்று கொவிட்-19 தொற்றிலிருந்து தம்மையும் சமூகத்தையும் பாதுகாக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...