bo
செய்திகள்இலங்கை

அத்துமீறும் இந்திய படகுகள் – யாழ். மீனவர்கள் இருவர் மாயம்!!

Share

அத்துமீறும் இந்திய படகுகள் – யாழ். மீனவர்கள் இருவர் மாயம்!!

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை மீனவர்கள் இருவர் காணாமல் போயுள்ளனர். இந்திய மீனவர்களின் இழுவைப் படகு மோதியதிலேயே இவர்கள் காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கடற்பரப்பில் அண்மைய நாள்களாக இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. இந்த நிலையில், நேற்று காலையிலும் இந்திய படகுகள் வடக்கு கடல் பகுதியில் நடமாடியுள்ளன.

நேற்று காலை மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வல்வெட்டித்துறை மீனவர்களின் இரண்டு படகுகள் மீது, அங்கு வந்த இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகள் மோதியுள்ளன.

இந்த சம்பவத்தில் ஒரு படகு கடும் சேதமடைந்த நிலையில், அதில் பயணித்த இருவருடன் கரை திரும்பியுள்ளது. இதேவேளை, மற்றைய படகில் பயணித்த வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதியைச் சேர்ந்த இராகவன், வளவன் ஆகிய மீனவர்கள் இருவரும் கரை திரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் இருவரையும் தேடி ஏனைய மீனவர்கள் கடலுக்குச் சென்று தேடுதல் நடத்தியபோதிலும் நேற்று இரவு வரை அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

MG 8826
இலங்கை

கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை இராணுவம் விட்டு வெளியேற ஜனாதிபதி உத்தரவு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...