colnallur163322285 7210658 02082019 VKK CMY
செய்திகள்இலங்கை

நல்லூர்க் கந்தனை தரிசிக்க தடுப்பூசி அட்டை அவசியம்!

Share

நல்லூர்க் கந்தனை தரிசிக்க தடுப்பூசி அட்டை அவசியம்!

நல்லூர்க் கந்தனை தரிசிக்க கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்ட அட்டை அவசியம் என்று யாழ்ப்பாண மாநகர சபை அறிவுறுத்தியுள்ளது.

நல்லூர் கந்தன் உற்சவ நடைமுறைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தற்போது பரவிவரும் கொவிட் தொற்றைக் கருத்தில் கொண்டு இந்த வருட உற்சவம் முழுமையான சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அடியார்களுடன் இடம்பெறவுள்ளது.

எனவே நல்லைக் கந்தன் அடியார்கள் இத்தகைய நெருக்கடி மிக்க சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பொறுப்புடனும் மிக அவதானத்துடனும் நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

சிறுவர்களும் முதியவர்களும் ஆலயத்துக்கு வருவதை முற்றாகத் தவிர்கவும். அடியார்கள் ஆலயத்தினுள் அனுமதிக்கப்படும் சந்தர்ப்பத்தில் சகல அடியார்களும் முத்திரை சந்தியிலிருந்து பருத்தித்துறை வீதியால் மாத்திரமே ஆலயத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்.

ஆலயத்தினுள் அடியவர்கள் எத்தனை பேரை அனுமதிப்பது என்பது அவ்வப்போது உள்ள நிலைமைகளைக் கருத்தில் கொண்டு சுகாதாரத் தரப்பின் வழிகாட்டலோடு தீர்மானிக்கப்படும். இதற்கு அடியார்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் – என்றுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1765079066 25 693273715360b md
இலங்கைசெய்திகள்

கண்டி – கொழும்பு ரயில் பயணிகளுக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள்!

கண்டி ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கிப் புகையிரதத்தில் பயணிக்கும் பயணிகளுக்காக, நாளை (டிசம்பர் 8) காலை...

image 49051e3a6e 1
இலங்கைசெய்திகள்

நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி: “மகிழ்ச்சியாகத் தூங்கப் போனோம், மண்ணுக்குள் புதைந்தோம்” – தப்பியோர் அதிர்ச்சிப் பேட்டி!

மடுசீம பூட்டாவத்த பகுதியில் ஏற்பட்ட கோரமான நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்த...

images 19
இலங்கைசெய்திகள்

அனர்த்த உயிரிழப்புகள் 627 ஆக உயர்வு: கண்டி மாவட்டத்தில் அதிக பாதிப்பு! 

நாடு முழுவதும் சமீபத்திய நாட்களில் ஏற்பட்ட மிக மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627...

image f1250cea24
அரசியல்இலங்கைசெய்திகள்

பூஸா சிறையில் அதிரடிச் சோதனை: 2 ஸ்மார்ட் போன்கள், 13 சிம் கார்டுகள் பறிமுதல்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையின்போது 2 ஸ்மார்ட் தொலைபேசிகள், 13 சிம்...