colnallur163322285 7210658 02082019 VKK CMY
செய்திகள்இலங்கை

நல்லூர்க் கந்தனை தரிசிக்க தடுப்பூசி அட்டை அவசியம்!

Share

நல்லூர்க் கந்தனை தரிசிக்க தடுப்பூசி அட்டை அவசியம்!

நல்லூர்க் கந்தனை தரிசிக்க கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்ட அட்டை அவசியம் என்று யாழ்ப்பாண மாநகர சபை அறிவுறுத்தியுள்ளது.

நல்லூர் கந்தன் உற்சவ நடைமுறைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தற்போது பரவிவரும் கொவிட் தொற்றைக் கருத்தில் கொண்டு இந்த வருட உற்சவம் முழுமையான சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அடியார்களுடன் இடம்பெறவுள்ளது.

எனவே நல்லைக் கந்தன் அடியார்கள் இத்தகைய நெருக்கடி மிக்க சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பொறுப்புடனும் மிக அவதானத்துடனும் நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

சிறுவர்களும் முதியவர்களும் ஆலயத்துக்கு வருவதை முற்றாகத் தவிர்கவும். அடியார்கள் ஆலயத்தினுள் அனுமதிக்கப்படும் சந்தர்ப்பத்தில் சகல அடியார்களும் முத்திரை சந்தியிலிருந்து பருத்தித்துறை வீதியால் மாத்திரமே ஆலயத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்.

ஆலயத்தினுள் அடியவர்கள் எத்தனை பேரை அனுமதிப்பது என்பது அவ்வப்போது உள்ள நிலைமைகளைக் கருத்தில் கொண்டு சுகாதாரத் தரப்பின் வழிகாட்டலோடு தீர்மானிக்கப்படும். இதற்கு அடியார்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் – என்றுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
44522559 ravann
செய்திகள்உலகம்

மதுரோ பாணி கைது புதினுக்குப் பொருந்தாது: உக்ரைன் ஜனாதிபதியின் எதிர்பார்ப்பும் ட்ரம்பின் நேரடிப் பதிலும்!

வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதே போன்றதொரு...

images 4 3
செய்திகள்அரசியல்இலங்கை

டக்ளஸ் தேவானந்தா ஒரு சர்வதேசக் குற்றவாளி; கைதை வெறும் கண்துடைப்பாக மாற்ற வேண்டாம் – சட்டத்தரணி சுகாஸ் கடும் சாடல்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியாளர் மட்டுமல்ல, அவர் தமிழர்களுக்கு எதிரான பல...

black flag
செய்திகள்இலங்கை

பெப்ரவரி 04 தமிழர்களின் கரிநாள்: கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பில் பாரிய பேரணிக்கு அழைப்பு!

இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியை, தமிழர் தேசத்தின் “கரிநாளாக”...

External Affairs Minister S Jaishankar calls on Sri Lankan President Anura Kumara Dissanayake in Colombo on Tuesday. ANI
செய்திகள்இலங்கை

இலங்கை அரசியலில் இராஜதந்திரப் போர்: இந்தியாவின் $450 மில்லியன் நிதியுதவியும், சீனாவின் அடுத்தகட்ட நகர்வும்!

இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட இந்திய மற்றும் சீன உயர்மட்டத் தூதுவர்களின் சந்திப்புகள் குறித்து இதுவரை...