in1
செய்திகள்விளையாட்டு

151 ஓட்டங்களால் இந்திய அணி அபார வெற்றி!

Share

151 ஓட்டங்களால் இந்திய அணி அபார வெற்றி!

லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளிடையே நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக களமிறங்கிய இந்திய அணி, இங்கிலாந்து அணியை 120 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்து, 151 ஓட்டங்களால் வெற்றியைத் தனதாக்கிக் கொண்டுள்ளது.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிராஜ் (4),பும்ரா (3), இஷாந்த் ஷர்மா (2), ஷமி (1) என இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.

60 ஓவர்களில் 272 ரன்கள் என்ற வெற்றி இலக்கை இங்கிலாந்துக்கு அணிக்கு நிர்ணயித்து இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது இந்தியா.

ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 1 – 0 என முன்னிலை வகிக்கின்றது. இந்த தொடரில் இன்னும் மூன்று போட்டிகள் எஞ்சியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

in2

in3

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...