1629371978 1618491646 court 2
செய்திகள்இலங்கை

கோஷ்டி மோதல் – நெல்லியடியில் 15 பேர் கைது!

Share

இரண்டு கோஷ்டிகளுக்கிடையில் நடைபெற்ற மோதலில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியிலுள்ள இராஜ கிராமத்தில் நடைபெற்றுள்ளது.

கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நேற்று இரவு இரண்டு குழுக்கள் மோதலில் ஈடுபட்டுள்ளன.  தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் மோதலுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் 15 பேரை கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் அவர்களை பிணையில் விடுவித்துள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாகவே அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது எனவும், அவர்களுக்கு எதிராக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

1763816381 road 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மண்சரிவு அபாயம் காரணமாக கொழும்பு-கண்டி பிரதான வீதி மீண்டும் மூடப்படுகிறது!

கொழும்பு – கண்டி பிரதான வீதி இன்று (நவம்பர் 26) இரவு 10 மணி முதல்...