arrest 1
செய்திகள்இலங்கை

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய 110 பேர் கைது!

Share

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச் சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, கடந்த ஒக்டோபர் 30ம் திகதி முதல் இதுவரை 80,055 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மேல் மாகாணத்தில் உள்நுழையும் , வெளியேறும் பகுதிகளில் பயணித்த 2,596 பேரும், 1,718 வாகனங்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி நேற்றைய தினம் பயணிக்க முற்பட்ட 99 பேரும் , 52 வாகனங்களும் திருப்பி அனுப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நாட்டில் 15 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட ஆரோக்கியமான சிறுவர்களுக்கும் உடனடியாக தடுப்பூசியை வழங்க தொற்றுநோய் தொடர்பான ஆலோசனைக் குழு அனுமதியளிக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது.

அந்த சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் உடனடியாக இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...