3dd5df09 b234c6f6 5f57cc49 067ea9f8 tourist
செய்திகள்இலங்கை

நாளாந்தம் 1000 சுற்றுலாவிகள் நாட்டுக்கு!!

Share

நாளாந்தம் 1000 சுற்றுலாவிகள் நாட்டுக்கு!!

நாளாந்தம் ஆயிரம் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான விசேட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது நாளாந்தம் 250 வௌிநாட்டு சுற்றுலா பயணிகளே நாட்டுக்கு வருகை தருகின்றனர் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.

மேலும், அமெரிக்கா, கனடா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தருகின்றனர்.சுகாதார அமைச்சின் விதிமுறைகளுக்கு அமைவாக சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும்.

சுகாதார அமைச்சால் குறிப்பிடப்பட்டுள்ள ஆபத்துமிக்க நாடுகளைத் தவிர ஏனைய நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தர முடியும். நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள், காப்புறுதி பெற்றிருத்தல் அவசியமாவதுடன், பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்ற ஒருவருக்கு பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை எனின், அவர்களுக்கு வௌியே செல்ல அனுமதி வழங்கப்படவுள்ளது. தடுப்பூசிகளை பெறாதவர்கள் 14 நாள்கள் தனிமையில் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்காக புராதன இடங்கள், வழிபாட்டுத்தலங்கள், சரணாலயங்கள் உள்ளிட்ட 22 சுற்றுலாத்தலங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...

20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...

19 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளை மூடுவது அல்லது இணையவழி கற்றலுக்கு மாறுவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு...

18 14
செய்திகள்உலகம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனா – வடகொரியா விமானச் சேவை: போக்குவரத்துத் துறையில் முக்கியத் திருப்பம்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் சீனா மற்றும் வடகொரியா இடையிலான...