chennai uni
இந்தியாசெய்திகள்

100 கோடி நிதி நெருக்கடி! – தமிழக அரசிடம் உதவி கோரும் பல்கலைக்கழகம்

Share

இந்தியாவின் மிகப்பழமையான 3 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்குவது சென்னை பல்கலைக்கழகம்.

1857-ம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம் சென்னை – மெரினா கடற்கரைக்கு எதிராக கம்பீரமாக தோற்றமளிக்கிறது. 153 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பல்கலைக்கழகம் இந்தியாவின் பாரம்பரிய சின்னமாகவும் விளங்குகிறது.

தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு தாய் பல்கலைக்கழகம் என்ற பெருமையுடன் திகழும் சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டணம் இந்தியாவிலேயே மிகக் குறைவு என்ற பெருமையையும் கொண்டது.

பல்வேறு சிறம்பம்சங்களைக் கொண்ட இந்த பல்கலைக்கழகம் தற்போது தவறான நிர்வாகம் உள்ளிட்ட காரணங்களால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தொகை, பேராசிரியர்களுக்கானசம்பளம் ஆகியவற்றுக்கே பெரும்பாலான நிதி செலவிடப்படுகிறது எனவும், தற்போது புதிய பட்டப்படிப்புகளை அறிமுகம் செய்து வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கிட்டத்தட்ட 100 கோடி நிதி பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ள சென்னை பல்கலைக்கழகம் தமிழக அரசிடம் ரூ.88 கோடி சிறப்பு நிதி உதவியை கோரி உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

#IndiaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
New Project 185 1
செய்திகள்அரசியல்இலங்கை

லண்டனில் ரில்வின் சில்வாவுக்கு எதிராகப் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்!

ரில்வின் சில்வா கடந்த 21ஆம் திகதி லண்டனுக்குச் சென்றார். அவர் நேற்றுப் பிற்பகலில், லண்டன் –...

4OIQC0T image crop 26859
செய்திகள்இலங்கை

இளம் பெண்கள்: போதிய ஆதரவின்றி பாலியல் தொழிலுக்குத் திரும்புவதாக அறக்கட்டளை கவலை!

18 வயதில் நன்னடத்தை மற்றும் சிறுவர் தடுப்பு நிலையங்களை விட்டு வெளியேறும் பல இளம் பெண்கள்,...

1763786264 landslide 6
செய்திகள்இலங்கை

கடுகண்ணாவ கோர விபத்து: அபாயகரமான பகுதியாக அறிவிப்பு – 6 பேர் பலி!

அண்மையில் கடுகண்ணாவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தினை அடுத்து, அந்தப் பகுதி மிகவும் அபாயகரமானதென அடையாளம்...

AP23249341908962 1763956497
உலகம்செய்திகள்

மலேசியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களுக்குத் தடை: சைபர் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கம்!

அடுத்த ஆண்டு முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய மலேசியா தீர்மானித்துள்ளதாக...