water
செய்திகள்உலகம்

வெள்ளத்தில் சிக்கிய பேரூந்து : 3 பேர் பலி

Share

மகாராஷ்டிராவில் வெள்ளத்தில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இதன்போது அரச பேருந்து ஒன்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மகாராஷ்டிரா மாநில அரசு பஸ் பேருந்து நாக்பூரில் இருந்து நண்டெட் என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்த வேளையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பேருந்து உமர்கெட் தாலுகாவில் உள்ள ‘தஹாகயோன்’ பாலத்தில் செல்லும்போது வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு கவிழ்ந்துள்ளது.

குறித்த பேருந்தில் சாரதி, நடத்துனர் தவிர நான்கு பயணிகள் பயணம்செய்துள்ளனர்.

இதில் பயணித்த ஆறு பேரும் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டனர். நடத்துனர் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவைளை ஆறு பேரில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். சாரதி காணாமல் போயுள்ளார். இவரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world
செய்திகள்இந்தியா

சீமான் பின்னடைவு: தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பிரபு முன்னிலை!

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி...

Untitled 5
செய்திகள்இலங்கை

ஏர்பஸ் ஊழல் விசாரணை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப்பாணை விடுக்கப்படவில்லை என ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...