21 619392d1d983c
செய்திகள்இலங்கைசெய்திகள்

விசேட சோதனை நடவடிக்கை வவுனியாவில்!

Share

வவுனியா நகரப்பகுதியில் சுகாதார அதிகாரிகள், இராணுவம் மற்றும் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

இந்த சோதனை நடவடிக்கை இன்று காலை முதல் இடம்பெற்றது.

வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த சோதனை இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் அமைந்துள்ள வங்கி, மற்றும் வியாபார நிலையங்கள், தனியார் மருத்துவ நிலையங்கள், உணவகங்களில் சோதனைகள் நடைபெற்றது.

சோதனை நடவடிக்கையின் போது சுகாதார நடைமுறைகளை பேணாமை மற்றும் முககவசங்கள் அணியாதவர்களுக்கு பொலிஸாரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தச் சோதனை நடவடிக்கை வைத்தியர் அரங்கன் மற்றும் பிரசன்னா தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்கள், இராணுவத்தினர், காவல்துறையினர், பிரதேச செயலக, மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டது.

21 619392d2549ed21 619392d2baa1921 619392d1ae95c21 619392d2797e7

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...