Covid
செய்திகள்இலங்கை

யாழில் மேலும் நால்வர் கொவிட் தொற்றால் உயிரிழப்பு!

Share

யாழில் மேலும் நால்வர் கொவிட் தொற்றால் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொவிட் தொற்றால் நால்வர் உயிரிழந்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 84 வயதுப் பெண் ஒருவர், மானிப்பாய், நவாலியைச் சேர்ந்த 68 வயதுப் பெண் ஒருவர் மற்றும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவர் ஆகியோரே கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் மயங்கி வீழ்ந்து உயிரிழந்த பெண்ணுக்கும் கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த உயிரிழப்புகளுடன் யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 145 ஆக அதிகரித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...