யாழில் மேலும் மூவர் கொரோனாத் தொற்றால் பலி!
செய்திகள்இலங்கை

மயங்கி வீழ்ந்து இறந்த பெண்ணுக்கு தொற்று உறுதி

Share

மயங்கி வீழ்ந்து இறந்த பெண்ணுக்கு தொற்று உறுதி

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண் உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணுக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மூளாய் வீதி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கணேசலிங்கம்ஜெயமலர் (வயது – 61) என்பவரே உயிரிழந்தவராவார்.
இவர், தனது வீட்டில் செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வளர்த்துதுள்ளார். அது அண்மையில் உயிரிழந்துவிட்டது. அது இறந்த கவலையில் குறித்த குடும்பப்பெண் சுமார் 5 நாள்களாக சாப்பிடாமல் தண்ணீர் மற்றும் மென்பானம் மாத்திரம் அருந்திவந்துள்ளார். இந்தநிலையில், நேற்றுஅதிகாலை அவர் வீட்டிலேயே மயங்கியுள்ளார். அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு நடத்திய பரிசோதனையில் அவர் உயிரிழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

உயிரிழந்த பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின்படி அவருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சமிந்த குலரத்ன
இலங்கை

பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

சபாநாயகரினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் வாகனங்கள் மற்றும் உத்தியோகபூர்வ இல்லங்களை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பான முறைப்பாடு தொடர்பில்...

இலங்கை கடற்பரப்பில் 09 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை

இலங்கை கடற்பரப்பில் 09 இந்திய மீனவர்கள் கைது.

நேற்று இரவு வேளையில், தலைமன்னார் உருமலை முனைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த...

எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
இலங்கை

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னிலையாகியுள்ளார்....

liver
இலங்கை

இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகரித்து வரும் நோய்த்தாக்கம்.

இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் வைத்திய நிபுணர் சுபுன் குலதுங்க, இளைஞர்கள் மத்தியில் குடல் சார்ந்த...