governer np
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட பட்டதாரிகள் ஆளுநருக்குக் கடிதம்

Share

இலங்கை பல்கலைக்கழகத்தில் 2019.12.31 திகதிக்குள் பட்டப்படிப்பை பூர்த்தி செய்து இதுவரை 60000 பட்டதாரிகள் நியமனத்தில் அநீதி இழைக்கப்பட்ட பட்டதாரிகளில் யாழ் மாவட்ட பட்டதாரிகள் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் மகஜர் ஒன்றை இன்று (29) கையளித்துள்ளனர்

2016 தொடக்கம் 2019 க்குள் பட்டம் முடித்தும் அரசாங்கம் கோரிய அனைத்து தகுதிகள் இருந்தும் இதுவரை பட்டதாரி பயிலுனர் நியமனம் கிடைக்காமல் உள்ளதாகவும்,

எங்களுடன் எங்களுக்கு பின்பு பட்டம்முடித்த எங்களுடைய சமமான தகுதியை உடைய நண்பர்கள் இன்று பட்டதாரி பயிலுனர் நியமனம் பெற்று 1 வருடமும் 3 மாதங்கள் நிறைவுபெற்றுவிட்டன.

IMG 20211129 WA0005

ஆனால், எங்களுக்கு இதுவரை எந்த ஒரு நியாயமும் கிடைக்கப்பெறவில்லை.

இதுவரை பல பெயர் பட்டியல்கள் வந்தும் எங்களுடைய பெயர்கள் இடம்பெறவில்லை.

இவ்வாறு பல பட்டதாரிகள் தாங்கள் தனியார்துறைகளில் மேற்கொண்டுவந்த வேலைகளை 2020.03.10 ம் திகதிகளில் இருந்தே விலகி இவ் பட்டதாரி பயிலுனர் நியமனத்திற்கு விண்ணப்பித்திருந்தனர்.

IMG 20211129 WA0004

எங்களால் எங்களுக்குரிய சகல தகமைகளையும் நிருபித்துக்கூட அமைச்சு எங்களைப் பற்றி கரிசனை எடுப்பதாகத் தெரியவில்லை. கடந்த 3 மாதம் மேன்முறையீடு செய்திருந்தோம்.

கிட்டத்தட்ட இவ்வாறான நிலையில் 465 இற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் இருக்கின்றோம்.

எங்களது பெயர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதனை இன்னும் வெளியிடாமல் தாமதப்படுத்துகின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகள் எங்களை மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
BIA 692136
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி அறிமுகம் – பயணிகளுக்கு கிடைத்துள்ள நன்மை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்காக புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய, பிரத்தியேகமாக தானியங்கி...

25 68f3aa6750683
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது! – தகவல் கசிவு குறித்து கவலை

யாழ்ப்பாணம் – மணியம் தோட்டப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் போதைப்பொருளுடன் நேற்று...

Estate
செய்திகள்இலங்கை

பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பளப் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு: கம்பனிகளின் புறக்கணிப்பால் குழப்பம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான சம்பள நிர்ணய சபை கூட்டம் நேற்று (அக்டோபர் 18)...

images 2
செய்திகள்இலங்கை

சந்திரிக்கா குமாரதுங்க காலமானதாகப் பரவும் செய்தி – பொதுமக்கள் அவதானமாக இருக்க அறிவுறுத்தல்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க காலமானதாகச் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகச் செய்திகள் பரவி வருகின்றன....