நாட்டுக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு புதிய நடைமுறை!!

download 8

நாட்டுக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு புதிய நடைமுறை!!

வெளிநாட்டிலிருந்து நாட்டுக்கு வரும் ஒவ்வொருவரும் விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

புதிய வழிகாட்டல்களின்படி, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை, அவர்கள் தனிமைப்படுத்தலுக்காக தீர்மானிக்கப்பட்ட ஹொட்டல்களில் தங்க வேண்டியது அவசியம்.

தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்கள் பரிசோதனை முடிவில் கொரோனாத் தொற்றாளர் அல்ல என உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் 14 நாள்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டியதில்லை என புதிய வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொவிட் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் பெற்றுக்கொள்ளாத ஒருவர், பரிசோதனை முடிவில் கொரோனாத் தொற்றாளர் அல்ல என உறுதிப்படுத்தப்பட்டாலும் கூட, அவர்கள் கட்டாயமாக 14 நாள்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிடப்பட்டுள்ள புதிய வழிகாட்டல்களில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Exit mobile version