80ebcdee 238a226f curfew guard
செய்திகள்இலங்கை

தொடர் முடக்கத்துக்கு சாத்தியம்!! – ஆராய்கிறது அரசு!

Share

தொடர் முடக்கத்துக்கு சாத்தியம்!! – ஆராய்கிறது அரசு!

நாட்டில் கொரோனாத் தொற்று அதிகரித்து செல்லும் நிலையில் நேற்று திங்கட்கிழமை தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள இந்த ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் வார இறுதிநாள்களில் முழுமையாக நடைமுறைப்படுத்த வாய்ப்புக்கள் உள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஊரடங்கு அமுல்படுத்தலை ஒரு மாத காலத்துக்கு தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. நாட்டை உடனடியாக முடக்குமாறு பல்வேறு தரப்புகளிடமிருந்தும் அரசுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையிலேயே நாட்டை முழுமையாக முடக்குவது தொடர்பில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...