நலம் விசாரிக்கச் சென்ற 25 பேருக்கு தொற்று! - தென்மராட்சியில் சம்பவம்
செய்திகள்இலங்கை

திருமணத்துக்காக இத்தாலியிலிருந்து வந்த இளைஞன் கொவிட்டால் சாவு!

Share

திருமணத்துக்காக இத்தாலியிலிருந்து வந்த இளைஞன் கொவிட்டால் சாவு!

திருமணத்துக்காக இத்தாலியில் இருந்து இலங்கை வந்த இளைஞர் ஒருவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

தங்கொட்டு வடக்கு, கோனவில, கிராகல பிரதேசத்தைச் சேர்ந்த இத்தாலியின் மொன்சோ நகரில் தொழில் செய்யும் 27 வயதான இந்த இளைஞனுக்கு இந்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதற்காக அவர் இத்தாலியில் இருந்து கடந்த மாதம் இலங்கை வந்தார்.

இலங்கைக்கு வந்த இளைஞனுக்குக் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது. அதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, இவரது தாயும் இரு வாரங்களுக்கு முன்னர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார் என்று சுகாதாரத் தரப்பினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாதம் திருமணம் நடக்கவிருந்த நிலையில் மகனும், தாயும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளமை அந்தப் பிரதேசத்தைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

12 21
செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை! பிரித்தானியாவிலிருந்து வந்த செய்தி

முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானிய நாடாளுமன்ற...