தியாகம் செய்யுமாறு கோரிக்கை மட்டுமே விடுத்துள்ளோம் - பந்துல குணவர்தன
செய்திகள்இலங்கை

தியாகம் செய்யுமாறு கோரிக்கை மட்டுமே விடுத்துள்ளோம் – பந்துல குணவர்தன

Share

தியாகம் செய்யுமாறு கோரிக்கை மட்டுமே விடுத்துள்ளோம் – பந்துல குணவர்தன

அரச ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ஒரு தொகையை கொரோனா நிதியத்துக்கு அறவிடுவதற்கு இன்னும் தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும், அவ்வாறானதொரு தியாகத்தை செய்யுமாறு வேண்டுகோள் மட்டுமே விடுக்கப்பட்டுள்ளது’ – இவ்வாறு அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் நேற்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது, நாடு முடக்கப்படுமானால் அரச ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ஒரு தொகையை அறிவிட வேண்டும் என ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர். எனவே, அவ்வாறானதொரு தீர்மானத்தை அரசு எடுத்துள்ளதா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘அவ்வாறானதொரு தீர்மானம் இன்னும் எடுக்கப்படவில்லை. எனினும், நெருக்கடியான சூழல்களின்போது தியாகங்களை செய்யநேரிடும். உதாரணமாக தாய்லாந்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டபோது அந்நாட்டிலுள்ள ஆன்மிகத் தலைவர்கள், விகாரைகளில் இருந்த தங்கங்களை மத்திய வங்கியிடம் ஒப்படைத்து தியாகம் செய்தனர்.
அதேபோல வடக்கு, கிழக்கு போரின்போது நாடுகளும், தனி நபர்களும் நன்கொடைகளை வழங்கினர். ‘நமக்காக நாம்’ நிதியத்துக்கு நானும் எனது நாடாளுமன்ற உறுப்பினருக்கான சம்பளத்தொகையை வழங்கினேன். தற்போது கொவிட் நிதியத்துக்கு சம்பளத்தை வழங்கியுள்ளேன். மேலும் சில அரசியல் பிரமுகர்களும் தம்மால் முடிந்த பங்களிப்பை செய்துவருகின்றனர்.

எனவே, உதவி செய்யக்கூடிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்களிடமிருந்த அந்த உதவியை எதிர்பார்க்கின்றோம். இதன்பிரகாரமே சம்பளத்தை ஒரு தொகையை வழங்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க யோசனை முன்வைத்துள்ளார். பொது முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்படும் மக்களுக்கு உதவி வழங்குவதற்காகவே குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.’ – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...