கொழும்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் காணப்படுகின்ற பதிவு செய்யப்படாத சொத்துக்களை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தனியார் சொத்துடைமையாளர்களுக்கே இவ்அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர ஆணையாளர் சட்டத்தரணி ரோஷணி திஸாநாயக்கவினால் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.
சொத்துகளின் உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்கு அச்சொத்துக்களை நகர சபையில் பதிவு செய்திருக்க வேண்டியது அவசியமாகுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு மாநகர எல்லைக்கு உட்பட்ட, இதுவரை பதிவு செய்யப்படாத சொத்துகள் தொடர்பிலான தகவல்களை, கொழும்பு மாநகர சபையின் colombo.mc.gov.lk எனும் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment