euro
செய்திகள்உலகம்

ஐரோப்பாவில் “கொலம்பியா திரிபு” பெல்ஜியத்தில் ஏழு பேர் உயிரிழப்பு!

Share

ஐரோப்பாவில் “கொலம்பியா திரிபு” பெல்ஜியத்தில் ஏழு பேர் உயிரிழப்பு!

கடந்த ஜனவரி மாதம் கொலம்பியாவில் கண்டறியப்பட்ட வைரஸ் திரிபு ஐரோப்பிய நாடுகளில் பரவி உள்ளது.

பெல்ஜியத்தில் பிரசெல்ஸ் நகர் அருகே மூதாளர் காப்பகம் ஒன்றில் கொலம்பிய வைரஸ் தொற்றுக்குள்ளான ஏழு பேர் உயிரிழந்தனர் என்ற தகவலை அந்த நாடு அறிவித்திருக்கிறது. அந்த ஏழு மூதாளர்களும் முழுமையாகத் தடுப்பூசி ஏற்றப்பட்டவர்கள் ஆவர்.

கொலம்பியாவில் தோன்றிய இந்த வைரஸ் முதலில் அமெரிக்காவிலும் ஏனைய சில தென்னமெரிக்க நாடுகளிலும் தொற்றி இருந்தது. தற்சமயம் அது ஐரோப்பாவில் பரவத் தொடங்கியுள்ளது. பிரான்ஸின் வட பிராந்தியமான Hauts-de-France பகுதியில் கொலம்பிய வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தப் பிராந்தியம் ஏற்கனவே டெல்ரா தொற்றுக்களில் முன்னணியில் உள்ளது. பிரான்ஸில் இதுவரை 56 பேருக்குக் கொலம்பியாத் திரிபு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என சுகாதார சேவைகள் பிரிவு அறிவித்துள்ளது.

உலகில் சுமார் 36 நாடுகளில் பரவியுள்ள கொலம்பியா திரிபுக்கு (Colombian variant) உலக சுகாதார நிறுவனம் இன்னமும் முறைப்படி கிரேக்க இலக்க பெயரைச் சூட்டவில்லை. B.1.621 என்னும் அறிவியல் குறியீட்டுப் பெயருடன் உள்ள அந்த வைரஸ் திரிபு தடுப்பூசிகளை எதிர்க்கக் கூடிய வல்லமை கொண்டதாக இருக்க
லாம் என்ற அச்சம் உள்ளது.

கொரோனா வைரஸுக்கு எதிரான உலகின் போர் தற்போது வேறு களங்களுக்கு – அதாவது புதிய திரிபுகளுக்கு எதிரான சண்டையாக – மாறிவிட்டது என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். தடுப்பூசி ஏற்றியவர்கள் தொடர்ந்து தொற்றுக்கு இலக்காகி வருகின்றனர்.

உலக மக்கள் மத்தியில் புதிய வைரஸ் திரிபுகள் தொடர்ந்து பரவிக்கொண்டிருக்கின்றன. இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்ரா பிறழ்வு புதியதொரு தொற்று நோய் போன்று உலகை ஆட்டிப்படைத்து வருகின்றது.

வெவ்வேறு நாடுகளில் அடையாளம் காணப்பட்ட மேலும் புதிய பல திரிபுகள் பலநாடுகளுக்கும் பரவியுள்ளன. டெல்ரா போன்று கொலம்பியா வைரஸ் உலகத் தொற்று நோயாகப் பரவிவிடலாம் என்று அச்சத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...