இந்தியாவில் இருந்து முதல் தொகுதி ஒட்சிசன் இலங்கைக்கு நேற்று கொண்டுவரப்பட்டுள்ளது என்று இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
நேற்று , இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள், இந்தியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்திருந்தன.
இதில், சென்னையில் இருந்து 40 தொன் மருத்துவ ஒட்சிசனை ஏற்றிவந்த கப்பல், நேற்று இரவு இலங்கையை வந்தடைந்துள்ளது என்று இந்தியத் தூதரகம், தனது ருவிற்றர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.