1770042557 images 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை கடற்பரப்பில் மீனவர்கள் மீது தாக்குதல்: இந்தியக் கடலோரக் காவல்படைக்கு அமைச்சர் கடும் கண்டனம்!

Share

இலங்கை கடற்பரப்பிற்குள் வைத்து இலங்கை மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலுக்குக் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 29ஆம் திகதி வென்னப்புவ, வெல்லமன்கரை துறைமுகத்திலிருந்து சென்ற இரண்டு படகுகளில் இருந்த 12 மீனவர்கள் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடித்துவிட்டு இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த போதே, இந்திய அதிகாரிகள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதாக மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

காயமடைந்த 4 மீனவர்கள் காலி, கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனைய 6 மீனவர்களை மீட்கக் கடற்படைக் கப்பல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்துத் தௌிவான விசாரணை கோரி கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

எமது எல்லைக்குள் வந்து தாக்கும் வரை கடற்படை என்ன செய்தது? என அகில இலங்கை நெடுநாள் மீன்பிடி படகு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் டிரோன் மென்டிஸ் கேள்வி எழுப்பியதுடன், வெளிப்படையான விசாரணைக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாதுகாப்புத் தவறியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்துப் பதிலளித்த கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமான்டர் புத்திக சம்பத், இலங்கை கடற்பரப்பை முழுமையாக ஒரே நேரத்தில் கண்காணிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது எனத் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான கடற்தொழில் உறவுகளில் மீண்டும் ஒருமுறை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
Court order 1
இலங்கை

போதைப்பொருள் கடத்திய பெண் சந்தேக நபருக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை கையகப்படுத்திய...

anura kumara dissanayake 1
இலங்கை

பதவி குறித்து கவலை இல்லை – அநுர!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என...

சுரேஷ் சலேbyjtujtu
இலங்கை

சுரேஷ் சலேவை மயக்க நிலையில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த முயற்சி!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே பரிசோதனைக்கு...

குழந்தையினை கைவிட்டு
இலங்கை

குழந்தையினை கைவிட்டு தப்பியோடிய தாய் – தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்.

கண்டி – வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர்...