நலம் விசாரிக்கச் சென்ற 25 பேருக்கு தொற்று! - தென்மராட்சியில் சம்பவம்
செய்திகள்இலங்கை

அமெரிக்கா, இந்தியாவை விடவும் இலங்கையின் நிலைமை மிக மோசம்!!

Share

அமெரிக்கா, இந்தியாவை விடவும் இலங்கையின் நிலைமை மிக மோசம்!!

கொவிட் -19 தொற்றுக்கு உள்ளாகுபவர்கள் மற்றும் தொற்றால் பாதிப்புக்குள்ளாகி உயிரிழப்பவர்கள் வீதத்தில் இலங்கையானது அமெரிக்கா, பிரித்தானியா, சிங்கப்பூர், பூட்டான், நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் உயர்மட்டத்திலுள்ளது என்று தெரிய வந்துள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தரவு பகுப்பாய்வொன்றின் மூலம் இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் காணப்படும் இந்த பாரதூரமான நிலைமையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்துவதற்கு தற்போது முன்னெடுக்கப்படும் கொவிட் -19 பரிசோதனைகளின் அளவு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் போதுமானதாக அமையாது.

இந்த தரவு பகுப்பாய்வின் ஊடாக கொவிட் -19 பரவலைக் கட்டுப்படுத்தல் தொடர்பிலும் தடுப்பூசி வழங்கல் தொடர்பிலும் தொற்று நோயியல் பிரிவு மற்றும் அரசாங்கம் என்பவை ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் கீழ் மட்டத்தில் இருப்பது வெளிப்படுகின்றது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...