gotta
செய்திகள்இலங்கை

நாடு தொடர்ச்சியாக முடங்குமாயின் மக்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் – கோருகிறார் ஜனாதிபதி

Share

நாடு தொடர்ச்சியாக முடங்குமாயின் மக்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் – கோருகிறார் ஜனாதிபதி

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துச் செல்லும் நிலையில் நாடு முழுமையாக தொடர்ந்தும் முடக்கப்படுமாயின் அதனை எதிர்கொள்ள மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியமாகும். இவ்வாறு தனது உரையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையிலேயே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தற்போதைய ஒரே வழி தடுப்பூசி ஏற்றிக்கொள்வதாகும்.
தொற்றின் ஆரம்பகட்டத்தில் நாட்டை முடக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த முடக்கம் மூலம் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த முடிந்தது. இருப்பினும் அடிக்கடி நாடு முடக்கப்பட்ட நிலையில் நாட்டின் பொருளாதாரம் மிக சரிந்து உள்ளது.

அரசுக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலையிலும், அரச ஊழியர்களுக்கான ஊதியத்தைக் குறைக்கவோ கொடுப்பனவுகளைக் கழிக்கவோ இல்லை.

நாட்டை மீண்டும் முடக்குவதால் நாட்டின் சுற்றுலாத்துறைக்கு மீண்டும் மிகப் பெரும் பாதிப்பு ஏற்படும், நாட்டை முழுமையாக மூடுவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் தொடர்பில் பொதுமக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

ஒட்சிசன் விநியோகம், இடைநிலை சிகிச்சை நிலையங்களை உருவாக்கல் மற்றும் தடுப்பூசி ஏற்றல் போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் நாம் செய்கின்றபோதிலும், நோயாளிகளை நிர்வகிப்பதென்பது, மருத்துவர்கள் பொறுப்பில் இருக்கின்றது. இது, வேலைநிறுத்தம், போராட்டங்களுக்கான காலம் அல்ல. நாட்டை அராஜக நிலைமைக்குக் கொண்டுவரத் தயாராகாதீர்கள். தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முன்னின்று செயற்படும் அனைத்துத்துறையினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நாட்டை நீண்ட காலத்துக்கு மூடி வைக்க வேண்டிய நிலைமை ஏற்படுமாயின், நாட்டிலுள்ள அனைவரும், மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதற்குத் தயாராக வேண்டும். இந்த இக்கட்டான – முக்கியமான தருணத்தில், நாட்டின் அனைத்துத் தரப்பினரும், இந்தத் நிலைமையைப் புரிந்துகொண்டு, திட்டமிட்ட முறையில் நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல வேண்டும்.

ஒரு குழுவாக, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தோற்கடிப்பதற்கு ஒன்றிணைந்து பணியாற்ற முன்வருமாறு, அனைவரிடமும் நான் கௌரவத்துடன் கேட்டுக்கொள்கிறேன். – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...