24 668aae2e0fddd 7
செய்திகள்பொழுதுபோக்கு

இலங்கை கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்றுவிப்பாளராக முன்னாள் வீரர்

Share

இலங்கை கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்றுவிப்பாளராக முன்னாள் வீரர்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு தற்காலிக தலைமைப் பயிற்றுவிப்பாளராக சனத் ஜெயசூரிய தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளரான கிறிஸ் சில்வர்வுட்(Chris Silverwood) பதவி விலகியுள்ளார்.

எனவே, பதவிக்கு பொருத்தமானவர் நியமிக்கப்படும் வரை சனத் ஜயசூரிய இடைக்கால தலைமைப் பயிற்றுவிப்பாளர் பொறுப்பினை வகிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இலங்கை மற்றும் இந்திய அணிக்கு இடையேயான ஒருநாள் மற்றும் ரி20 கிரிக்கெட் போட்டிக்கு தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஜெயசூரிய செயற்படுவார் என கூறப்பட்டுள்ளது.

சனத் ஜெயசூரிய தற்போது இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக பணிபுரிந்து வருகின்றார்.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளராக அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் கிறிஸ் ரோஜர்ஸை நியமிக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிறிஸ் ரோஜர்ஸுடனுடனும்(Chris Rogers) மேலும் இரண்டு வெளிநாட்டுப் பயிற்றுவிப்பாளர்களுடனும் இலங்கை கிரிக்கெட் வாரியம் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்திரேலியாவின் முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான 46 வயதுடைய கிறிஸ் ரோஜர்ஸ் தற்போது விக்டோரியா மாநில அணிக்குப் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...