சமந்தாவின் விவகாரத்து குறித்து அவரது தந்தை என்ன கூறியுள்ளார் தெரியுமா?

Naga Chaitanya Samantha Ruth Prabhu Joseph Prabu

நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றனர். அவர்கள் பிரிவுக்கான காரணத்தை இதுவரை வெளியிடவில்லை.

இந்நிலையில் சமந்தாவின் தந்தை தனது சமூக வலைதளபக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், “நீண்ட காலத்திற்கு முன்பு, ஒரு கதை இருந்தது. மேலும் அது இனி இருக்காது. எனவே, ஒரு புதிய கதை மற்றும் புதிய அத்தியாயத்தை தொடங்குவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

இதனுடன், சமந்தா – நாக சைதன்யா ஆகியோரது திருமணம் உள்ளிட்ட சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இவரது பதிவிற்கு பலரும் ஆறுதல் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் இப்பதிவு வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

#Samantha

 

Exit mobile version