17
சினிமாபொழுதுபோக்கு

நள்ளிரவில் போலீஸ் நிலையம் சென்ற ரச்சிதா!

Share

நள்ளிரவில் போலீஸ் நிலையம் சென்ற ரச்சிதா!

சரவணன் மீனாட்சி என்னும் சீரியல் மூலம் பிரபல்யமான ரச்சிதா, தினேஷும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை. இப்படி நிலையில் ரச்சிதா தன் கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்கிறார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் திடீரென ரச்சிதா மாங்காடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் ஒன்று அளித்தார். அதில் “தனது கணவர் தினேஷை பிரிந்து தனியாக வசித்து வரும் நிலையில் கடந்த சில தினங்களாக தனது செல்போனுக்கு தினேஷ் ஆபாசமாக மெசேஜ் அனுப்புவது மற்றும் செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுவதாக” புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த புகாரின் பேரில் மாங்காடு அனைத்து மகளிர் போலீசார் , தினேசை விசாரணைக்கு அழைத்திருந்தனர். இந்த நிலையில் காவல் நிலையம் வந்த தினேஷ் “ரச்சிதாவிற்கு வேண்டுமானால், விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடி கொள்ளலாம்” என கூறிச் சென்றுள்ளார். இந்த புகார் குறித்து போலீசார் ரச்சிதாவிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ரச்சிதா நள்ளிரவில் காவல் நிலையத்தில் விசாரணைக்கு, ஆஜராகி விட்டு சென்றிருக்கும் சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

அதுமட்டுமல்லாது பிரிந்து வாழ்ந்து வரும் கணவர் தனக்கு மிரட்டல் கொடுப்பதாக ரச்சிதா அளித்த புகார் ஆனது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. தொடர்ந்து இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...