ஊறுகாய் நமது உணவுமுறையில் முக்கிய இடம் பிடித்து வருகிறது.
எலுமிச்சை, மாங்காய், பூண்டு, நார்த்தங்காய் ஆகிய ஊறுகாய்களை பலர் ருசித்து ரசித்து சாப்பிடுபவர்கள்.
அந்தவரிசையில் அசைவ பிரியர்கள் பலரும் பிடித்த ஒரு ஊறுகாயாக ‘சிக்கன் ஊறுகாய்’ உள்ளது. தற்போது இதனை எப்படி தயாரிக்கலாம் என்பதை பார்ப்போம்.
தேவையானவை
- எலும்பு நீக்கப்பட்ட கோழிக்கறி – 500 கிராம்
- மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
- மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
- இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக் கரண்டி
- எண்ணெய் – தேவையான அளவு
- எண்ணெய் – 2 மேசைக் கரண்டி
- இஞ்சி பூண்டு விழுது – 2 மேசைக் கரண்டி
- மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி
- மிளகாய்த்தூள் – ¼ கப்
- கடுகுத்தூள் – 1 மேசைக் கரண்டி
- வெந்தயத்தூள் – ¼ தேக்கரண்டி
- எலுமிச்சம்பழம் – அரை மூடி
- எண்ணெய் – 2 மேசைக் கரண்டி
- வெந்தயம் – 1 தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் – 5
- கறிவேப்பிலை – 10
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
பெரிய பாத்திரத்தில், சுத்தம் செய்த கோழிக்கறி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு, நன்றாகக் கலந்து 30 நிமிடங்கள் ஊற வைத்து வாணலியில் பொரிப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். ஊறவைத்த கோழிக்கறியை சிறிது சிறிதாக அதில் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாகவும், மிருதுவாகவும் மாறும் வரை பொரித்தெடுக்கவும்.
#FoodRecipe