தமிழில் ஈஸ்வரன், பூமி ஆகிய படங்களில் நடித்துள்ள நிதி அகர்வால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அவருடைய சமூக வலைதள பக்கத்தில்,
மதுபான போத்தலைத் திறந்து கையில் உள்ள கோப்பையில் மதுவை ஊற்றி முகர்ந்து பார்ப்பது போன்றும், அந்த அந்த மதுவை நன்றாக பருகலாம் என்று பேசியும் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
நடிகை நிதி அகர்வால் மது விளம்பரத்தில் நடித்தது சமூக ஆர்வலர்களை ஆத்திரப்படுத்தியுள்ளது.
இளைஞர்களை மது அருந்தத் தூண்டுவதாக உள்ளது என வலைதளவாசிகள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
முன்னணி நடிகைகள் ஹன்சிகா, பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகைகள் அதிக பணம் வாங்கிக்கொண்டு வெளிநாட்டு மதுபானங்களை சமூக வலைத்தள பக்கத்தில் விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
#CinemaNews
Leave a comment