7 3 scaled
சினிமாசெய்திகள்

படத்தை நிறுத்திவிட்டு பணத்தை திருப்பி கொடுக்க வந்த ரஜினி.. இயக்குனர் ஷங்கர் செய்த விஷயம்

Share

படத்தை நிறுத்திவிட்டு பணத்தை திருப்பி கொடுக்க வந்த ரஜினி.. இயக்குனர் ஷங்கர் செய்த விஷயம்

படத்தை நிறுத்திவிட்டு பணத்தை திருப்பி கொடுக்க வந்த ரஜினி.. இயக்குனர் ஷங்கர் செய்த விஷயம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் உருவான திரைப்படம் 2.0.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருந்தது. 2010ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் எந்திரன். இதனுடைய இரண்டாவது பாகமாக தான் 2.0 உருவானது.

இப்படத்தில் முதன் முதலில் ரஜினியுடன் இணைந்து ஹாலிவுட் நடிகர் அர்னால்டு நடிக்கவிருந்தார். ஆனால், அவரால் நடிக்கமுடியாமல் போக கமல் ஹாசனை தேர்வு செய்துள்ளனர். பின் அவராலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க முடியாமல் போக இறுதியாக தான் அக்ஷய் குமாரை வில்லன் ரோலில் நடிக்கவைத்துள்ளனர்.

இந்த நிலையில், 2.0 படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த நேரத்தில் ரஜினியின் உடல்நிலை காரணமாக படத்தில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 20% சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் ரஜினி இப்படத்திலிருந்து விலகிவிடலாம் என முடிவு செய்துள்ளார். இதுவரை தயாரிப்பு நிறுவனம் செய்த செலவிற்கான தொகையை கொடுத்து விடுகிறேன் என்றும் அவரே கூறியுள்ளார்.

ஆனால், இயக்குனர் ஷங்கர் கதையில் சில மாற்றங்களை கொண்டு வந்து ரஜினிக்கு சிரமம் கொடுக்காமல் படத்தில் நடிக்க வைத்துள்ளார். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...