11 1
சினிமாசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் பதற்றநிலைக்கு மத்தியில் சீனா மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை

Share

இந்தியாவுடன் நீடிக்கும் பதற்ற நிலைக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு அதிநவீன PL-15 ஏவுகணைகளை சீனா அவசரமாக வழங்கியுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரிக்கும் நிலையில், பாகிஸ்தான் விமானப்படை (PAF) சீனாவின் மிகவும் உயர்தரமான PL-15 ஏவுகணைகளை அவசரமாக பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் விமானப்படை, தற்போது தனது புதிய JF-17 Block III போர்விமானங்களில் PL-15 Beyond Visual Range (BVR) ஏவுகணைகளை களஞ்சியப்படுத்தியுள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

இந்த ஏவுகணைகள் சீன விமானப்படை இருப்பிடங்களில் இருந்து நேரடியாக வழங்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

PL-15 ஏவுகணைகள், 200 – 300 கிமீ வரையான மிக நீண்ட தூரத்தை அடையக்கூடியவை. இது பாகிஸ்தான் விமானப்படைக்கு இந்திய விமானப்படையை (IAF) அதிக தொலைவில் இருந்து தாக்கும் திறனை வழங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சீனாவின் PL-15, அமெரிக்காவின் AIM-120D மற்றும் ஐரோப்பியாவின் Meteor ஏவுகணைகளுடன் ஒப்பிடப்படுகிறது.

Meteor ஏவுகணைகளை இந்தியா தனது ரஃபேல் விமானங்களில் ஏற்றியுள்ளது. இருப்பினும், PL-15 ஏவுகணைகள் விரைவான வேகத்தையும் நீண்ட இலக்குகளை தாக்கும் திறனையும் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த அபாயத்திற்கு எதிராக, இந்திய விமானப்படை ரஷ்யாவின் R-37M ஏவுகணைகளை வாங்கும் திட்டத்தை பரிசீலிக்கிறது. இந்த ஏவுகணைகள் 300-400 கிமீ தூரத்தில் இலக்குகளை தாக்க முடியும்.

இதற்கிடையில், இந்தியா தனது உள்நாட்டு அஸ்திரா (Astra) Mk-III திட்டத்தையும் விரைவில் நிறைவேற்ற முயற்சிக்கிறது. புதிய அஸ்திரா ஏவுகணை 340 கிமீ தூரத்தில் இலக்குகளை தாக்கும் திறன் பெற்றதாக கூறப்படுகிறது.

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றம் மேலும் அதிகரிக்கும் சூழ்நிலையில், இரு நாடுகளும் தங்கள் ஆயுதங்களைக் கொண்ட ஆக்கிரமிப்பு வலிமையை மேம்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
25 684c110644e76
இலங்கைசெய்திகள்

கிழித்தெறியப்பட்ட பௌத்த தோரண பதாதைகள்! விளக்கமளித்த பெண்

தனியார் காணி ஒன்றில் பௌத்த விகாரை வடிவில் பதாதைகள் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்தது....

images 3 1
இலங்கைசெய்திகள்

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே பயணி பகிர்ந்த தகவல்

உலகையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்தில் ஒரே ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்த நிகழ்வு...

25 684befed3eedb
இலங்கைசெய்திகள்

ஒபரேஷன் ரைசிங் லயன்! ஈரானை உலுக்கிய தாக்குதலால் அணு ஆயுத விளிம்பில் மத்திய கிழக்கு

அலை அலையாக வான்வழித் தாக்குதல்கள், உயர் இராணுவ மற்றும் அரசியல் அதிகாரிகளைக் கொல்வது மற்றும் இராணுவ...

images 8
இலங்கைசெய்திகள்

யாழ்.மாநகர சபையின் முதல்வர் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்ட கருத்து

இலங்கை தமிழரசுக்கட்சி முன்னிறுத்திய வேட்பாளர்களுக்கு வாக்களித்து தெரிவு நிகழ்ச்சிக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி என தமிழரசுக்...