அஜித் அனுப்பிய எஸ்எம்எஸ்: நடிகர் பார்த்திபன் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு

image 1200x630 8

நடிகர் பார்த்திபன் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியிடும் பதிவுகள் இணையத்தில் வைரலாவது வழக்கம். சமீபத்தில் அவர் நடிகர் அஜித் குமார் பற்றிப் பதிவிட்டதையடுத்து, அஜித் உடனே அவருக்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்பியுள்ளார். அந்த முழு செய்தியையும் பார்த்திபன் தற்போது வெளியிட்டுள்ளார்.

நடிகர் பார்த்திபன் தனது பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:

“ஒருவரோடு ஒருவரை ஒப்பிடாமல், ஒவ்வொருவரின் தனித்தன்மையையும் உயர்வாய் பாராட்டி உளம் மகிழச் செய்வது என் வழக்கம்! அப்படி நேற்று முன்தினம் Mr. Ajith பற்றி நான் பதிவிட்டதற்கு அவரது அன்புமிகு ஒழுக்கமிகு ரசிகர்கள் நன்றி தெரிவிக்க நான் அதையும் ரசித்தேன். ஆனால், நான் சற்றும் எதிர்பாராமல் அவரிடமிருந்தே அந்தக் குறுஞ்செய்தி வந்தது.”

“எந்த எதிர்பார்ப்புமில்லாமல் ஒருவர் நம்மை பாராட்டி வாழ்த்துவதற்கு, சுடச்சுட நன்றி தெரிவிப்பதை அவர் தலையாய கடமையாக நினைக்கிறார் என்பதனை எண்ணி மனதிற்குள் பாராட்ட நினைத்தேன். அது இப்படி வெளியே வந்துவிட்டது!”

இவ்வாறு நடிகர் பார்த்திபன் அஜித்தின் குறுஞ்செய்தி மற்றும் அவருடைய பண்பு குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version